சமீபத்தில், எக்ஸ் வலைதளத்தில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. அதில், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, கால்களை நீட்டி அமர்ந்தபடி செல்போனில் பேசிக்கொண்டிருக்க, இரண்டு தொடக்கப் பள்ளி மாணவிகள் அவரது கால்களை அமுக்கி விடுகின்றனர். இந்த காணொளி, தமிழ்நாடு அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம் என்று பரப்பப்பட்டு வருகிறது.

ஆனால், இதன் உண்மைத் தன்மை என்னவென்றால், இது நவம்பர் மாதம் வெளியான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு காணொளி ஆகும். மேலும், அந்த ஆசிரியை அப்போதே பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுவிட்டார். தற்போது இந்த காணொளி மீண்டும் தவறான தகவலுடன் பரவி வருகிறது.