இந்தியாவில் உள்ள ஒரு ஆறு முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுவதை வெளிநாட்டவர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “தண்ணீர் இருப்பதே தெரியாத அளவிற்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன; இந்தத் தண்ணீரை ஒரு வாய் குடித்தால் கூட உயிருக்கே ஆபத்து” என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்துப் பலரும் இந்தியாவைக் கேலி செய்து வருவது நம் நாட்டுக்கு ஒரு கசப்பான உண்மையாக அமைந்துள்ளது.
"Indian rivers are filled with trash." 🇮🇳
"One sip of water will probably kill you." 🚨
A foreigner was shocked to see the dirty condition of an average river in India. People are mocking us in the reply section.
This is our collective failure, an ugly reality. pic.twitter.com/nIAHMaNh5k
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 1, 2026
நதிகளைப் புனிதமாகப் போற்றும் நம் நாட்டில், ஆறுகள் இன்று குப்பைத் தொட்டிகளாக மாறி வருவது நம் அனைவரின் கூட்டுத் தோல்வியையே காட்டுகிறது. வெளிநாட்டவரின் இந்த விமர்சனம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இனியாவது நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதைத் தவிர்த்து, நம் இயற்கையைப் பாதுகாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்பதே இந்த வைரல் வீடியோ உணர்த்தும் பாடமாகும்.
