மதுரை பழங்காநத்தம் சுற்று சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து பொதுக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியபோது “எனக்கு 69 வயதாகிறது. இன்னும் 150 வயது வரை நான் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்றுள்ளேன். அதை 2026 வருடம் அரியணையில் என்னை ஏற்றினால் சொல்வேன். தமிழ்நாட்டில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனி மனித ஒழுக்கத்துடன் அதை புறக்கணித்தால் மட்டும் போதும். பின் தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும்” என்று பேசினார்.