திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று கட்சிக் கூட்டத்தில் பேசினார். அப்போது, நான் எதிரி சாதியம் தான் என்பதை முடிவு செய்து விட்டேன். சாதியம் சொல்லிக் கொடுக்கக் கூடியது கட்சிகளாக இருந்தாலும் அதை தடுப்பது என் கடமை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் இன்னும் எத்தனை சமூகங்கள் விலங்கிடப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியும். குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களை மட்டும் பாதிக்கும் விவகாரம் கிடையாது, ஜனநாயகத்திற்கும் எதிரானது. அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார்.