கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது பேசிய சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அதிலிருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்து விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் ஒரே பிரச்சினையாக ஓடிக் கொண்டிருக்கிறது சில பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாகவும் ஒரு சில பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினியை சீண்டும் விதமாக ‘என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்’ என்ற வசனத்தோடு ரஜினி மற்றும் விஜய் படங்களை அச்சிட்டு மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கூறிய ‘கழுகு, காகம்’ கதையில், ரஜினி விஜய்-ஐ தான் காகம் என கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகர் ரஜினியை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.