அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிகுண சேகரனாக நடித்து வரும் மாரிமுத்து பங்கேற்றார். அப்போது அவர் ஜோதிடர்களுக்கு எதிரான கருத்தை முன்வைத்து பேசினார். ஜோதிடர்கள் எல்லாம் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் எனவும், தனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையில்லை என்றும் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஆறுமுகம் எனும் ஜோதிடர் மாரிமுத்துவுக்கு சம்மன் அனுப்பினார். அதற்கு அவர் உரிய விளக்கம் தரப்படவில்லை என்பதால், மாரிமுத்து மீது கிரிமினல் வழக்கு தொடர உள்ளதாகவும், 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர்.