டெல்லி ஜந்தர் மந்தரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு லோகேந்திர சக்ஸேனா என்பவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசம், மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த லோகேந்திரா, தனது கணவரை இழந்த சகோதரிக்குக் கருணை அடிப்படையில் கல்வித் துறையில் வேலை கிடைக்க வேண்டி, கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கிப் போராடி வந்துள்ளார்.
ஒரு சிறிய குளிர் பானக் கடை நடத்தி வந்த லோகேந்திரா, தனது சகோதரிக்காகப் பல வருடங்கள் அலைந்தும் எந்தப் பலனும் கிடைக்காததால், அரசு அமைப்பின் மீது ஆழ்ந்த மன விரக்தி அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். டெல்லிக்குச் சென்ற லோகேந்திரா, அங்கு ஜந்தர் மந்தரில் தன்னைப் போலப் போராடும் மற்றவர்களையும் கண்ட பிறகு, தனது கோரிக்கைக்கு யாரும் செவிசாய்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையை முழுவதுமாக இழந்து, துயரமான முடிவை எடுத்துள்ளார்.
#WATCH | Waiting For Justice, Man Ends Life At Delhi’s Jantar Mantar; Sister Thre*tens Suic*de#MadhyaPradesh #MPNews #Delhi #IndiaNews pic.twitter.com/N5niQYX0E3
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 13, 2025
“>
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, லோகேந்திராவின் உடல் அவரது சொந்த ஊரான அம்பாவுக்குக் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இறுதிச் சடங்கிற்குப் பிறகு அவரது சகோதரி கண்ணீருடன் உடைந்துபோய் பேசியபோது,
“அரசு எனக்கு வேலையை வழங்கவில்லை என்றால், நானும் என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன். ஒரு விதவையான என்னால் ஒரு பியூன் வேலை கூடவா பெற முடியாது?” என்று வேதனையுடன் அரசை எச்சரித்துள்ளார். அண்ணனின் மரணத்திற்குப் பிறகு, கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படாவிட்டால் தானும் அதே முடிவை எடுக்க நேரிடும் என்று அவர் விடுத்துள்ள உருக்கமான எச்சரிக்கை, அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீதான அவர்களின் அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
