பரேலி மாவட்டம் பாக்ரென் டிப்போ அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், நிறுத்தப்பட்ட எண்ணெய் டேங்கர் லாரியிலிருந்து ஒருவர் பிளாஸ்டிக் கேனுடன் இறங்கி சாலையில் நடந்து செல்ல ஆரம்பிக்கும் காட்சி தெளிவாகக் காணப்படுகிறது. சில நொடிகளில், டேங்கர் நகரத் தொடங்கும் போது அவர் மீது பின்னால் மோதுகிறது. கீழே விழுந்த அந்த நபர் பின்னர் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதற்கு பின்னர், டேங்கர் வேகமாகச் சென்று பாதிக்கப்பட்டவரின் உடல் மீது மீண்டும் சென்றது.
बरेली- तेल टैंकर से उतरा व्यक्ति के साथ हादसा, उतरते ही आया दूसरे तेल टैंकर की चपेट में
टैंकर की चपेट में आने से मौके पर हुई मौत, एक्सीडेंट की घटना सीसीटीवी में हुई कैद, आंवला थाना क्षेत्र के बगरेन अड्डे की घटना @bareillypolice @Uppolice pic.twitter.com/6AjqypepZq
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) November 30, 2025
வீடியோவில் காட்சியளிக்கும் போக்குவரத்து பயணிகள் நிறுத்த முயன்றாலும், யாரும் உதவ முன்வரவில்லை. சம்பவத்தை அறிந்த பரேலி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரேலி காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: பரேலியில் உள்ள ஆம்லா காவல் நிலையத்தின் கீழ் சம்பவத்திற்கு தொடர்புடைய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.” மேலும் இந்த சம்பவம் சாலையில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் பொறுப்பற்ற டிரைவிங் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
