தளபதி விஜய் கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வருகிறார். மற்றொருபுறம் உதயநிதி இப்போது அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாயிலாக பல்வேறு படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். விஜய்க்கும் உதயநிதிக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், தளபதியின் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு உதயநிதிக்கு தரப்படவில்லை.

இதன் காரணமாக நீண்ட காலமாக விஜய் மற்றும் உதயநிதி இடையில் என்ன தான் பிரச்சனை என கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் உதயநிதி கூறியதாவது “விஜய் உடன் ஒருக்காலத்தில் மிக நெருக்கமாக இருந்தேன். எனினும் ஒரு கருத்து வேறுபாடு வந்தது. தளபதி யாரையும் கிளோஸ் ஆக விட மாட்டார்.

அதேநேரம் friend ஆகிவிட்டால் மிகவும் நெருக்கமாக இருப்பார். அவரை பற்றி என்னிடமும், என்னை பற்றி அவரிடமும் தவறாக சில பேர் கூறியதால் கருத்து வேறுபாடு வந்தது. இதனால் நானே ஒருமுறை அவரிடம் சென்று நடந்தது என்ன என சொன்னேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். இப்போது நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். கடைசியாக தேர்தலுக்கு முன்னதாக அவர் வீட்டுக்கு சென்றேன்” என்று உதயநிதி கூறியுள்ளார்.