மக்களவைத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள சம்மன் தொடர்பாக பேசிய அவர், இரட்டை இலையை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எங்களுக்கு வழங்கியுள்ளது.

எனவே சின்னம் தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை. வரவுள்ள அனைத்து தேர்தல்களிலும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறிவரும் நிலையில் மறுபக்கம் இபிஎஸ்ஸும் இவ்வாறு கூறி வருகிறார். இதனால் பெரும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.