சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் நாளை (டிச.05) தங்களுடைய ஊழியர்களுக்கு முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மிக்ஜாக் புயல் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு 11 மணி முதல் அதி தீவிர கனமழை பெய்து வருவதால், சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன; சென்னை மாநகரின் குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.