தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு கருதி 142 ரயில் சேவைகள் முடங்கின. நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு வரும் 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

மேலும் கனமழையால் பல்லவன் விரைவு ரயில் எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை விரைவு ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். காரைக்குடிக்கு செல்லும் பல்லவன் விரைவு ரயில் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.