மேற்குவங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளது. இவர் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய போது ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அக்டோபர் 26ஆம் தேதி அதாவது நேற்று காலை முதல் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய நிலையில் தற்போது அவரை கைது செய்தனர்.