ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைக்கற்கள் சரிவு காரணமாக மலை ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.