திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் லைசன்ஸ் காண்பித்தால் மட்டுமே கோவிலில் மலை ஏற டோக்கன் வழங்கப்படும். பக்தர்கள் மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.