உ.பி.யில் பிரபல ரவுடி அதிக் அகமது மற்றும் அஷ்ரப் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய உ.பி., அரசு ஷாகஞ்ச் காவல்துறை மூத்த அதிகாரி அஸ்வனி குமார் சிங், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

இருவரையும் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது, பத்திரிக்கையாளர் வேடத்தில் வந்த 3 பேர் அவர்களை சுட்டுக்கொன்றது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.  இச்சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த கொலை தொடர்பாக மாநில அரசு, விசாரணை குழு அமைத்து விசாரித்து வருகிறது.