தமிழ்நாட்டில் இன்று முதல் ஜூன் 10ஆம் தேதி வரை 17 மாவட்டங்களில் உளுந்து, பச்சை பயிறு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் அரவை கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 111.60 குறைந்தபட்ச ஆதரவு விலையாக தரப்பட உள்ளது. கொப்பரை தேங்காய் கொள்முதல் 2024 நடப்பாண்டில் இன்று முதல் ஜூன் 10 வரை நடைமுறைப்படுத்தப்படும். நடப்பாண்டில் பந்து கொப்பரை கிலோ ரூபாய்க்கு 120, அரவை கொப்பரைக்கு கிலோ ரூபாய் 111 குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

90,300 மெட்ரிக் டன் இலக்குடன் இன்று முதல் ஜூன் 10 வரை கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூபாய் 69.50 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்