கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் பிரசாத்தின் நண்பரான ஜோசப் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் ஒரு வாரத்திற்கு முன்பு சுற்றுலா சென்றார். இதனால் தன்னுடைய வீட்டை பார்த்துக் கொள்ளும்படி பிரசாத்திடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து ஜோசப் வீட்டுக்கு அனிலா சென்றுள்ளார். அங்கு பிரசாத் மற்றும் அனிலா இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது தன் கணவரை பிரிந்து விட்டு உங்களுடனே சேர்ந்து வாழ விரும்புவதாக அனிலா கூறியுள்ளார். ஆனால் இதற்கு பிரசாத் மறுப்பு தெரிவித்தார். இதனால் கடந்த 3 ஆம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரசாத் துப்பட்டாவால் அனிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் பிறகு உடலை அங்கேயே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில் ஜோசப் செல்போன் மூலம் பிரசாத்துக்கு பலமுறை தொடர்பு கொண்ட நிலையில் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் தன் வீட்டை சென்று பார்க்குமாறு அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு பெண்ணின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு பிரசாத் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில் அவர் ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. அவருடைய சடலத்தையும் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.