கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வு குறித்த செய்தி இணையத்தில் உலா வருகிறது. அதில் வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 யூனிட் மின்சாரத்திற்கு 55 ரூபாய் முதல் 900 யூனிட்டுக்கு 1130 ரூபாய் வரை மின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக ஒரு புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த உண்மை தன்மையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அவை முற்றிலும் பழைய செய்தி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07 / 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம் என விளக்கம் அளித்துள்ளது.