பீகார் மாநிலத்தில் சரண் என்ற மாவட்டத்தில் சாப்ராவில் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் நான்கு கால்கள், நான்கு கைகள், 4 காதுகள் மற்றும் இரண்டு முதுகுகள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. அதேசமயம் குழந்தைக்கு இரண்டு இதயங்களும் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. குழந்தையின் தலையின் வடிவமும் அசாதாரணமாக தான் இருந்தது. அந்த காட்சியைக் காண மருத்துவமனைக்கு ஏராளமானோர் படை எடுத்தனர்.

இந்த குழந்தையை சிலரும் தெய்வீக அவதாரமாக பார்த்தனர். இந்நிலையில் பல பரபரப்புகளுக்கு மத்தியில் 20 நிமிடங்கள் வரை உயிர் வாழ்ந்த அந்த குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.