கான்பூர் பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

பைக்கின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள உயரமான பால் கேன்களின் மீது ஒரு இளைஞர் அமர்ந்து கொண்டு, எவ்விதப் பாதுகாப்புமின்றிச் செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன.

மக்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய பொறுப்பற்ற செயலைச் சுட்டிக்காட்டும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

“>

 

போக்குவரத்து விதிகளை மீறிச் செல்லும் இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.