இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு பஞ்சமே இருக்காது. பொதுவாக காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.

ஆனால் பார்ப்பதற்கு கரடு முரடாக தெரிந்தாலும் அதுவும் குழந்தை குணம் கொண்டது தான். அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வீடியோவில் தாய் யானை தனது ஜோடியுடன் வந்து தண்ணீரில் உயிரற்றுக்கிடக்கும் தனது குட்டியை எழுப்புவதற்கு போராடுகிறது. பல வழிகளில் முயற்சித்த நிலையில் ஒரு கட்டத்தில் கதறி அழ செய்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.