இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 9.6 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு சிலிண்டருக்கு வழங்கும் மானிய தொகையை உயர்த்தி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னதாக சிலிண்டர் மானியம் 200 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சிலிண்டருக்கு வழங்கும் மானியத் தொகை 300 ரூபாய் ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சிலிண்டரின் விலை மானிய தொகையை தவிர்த்து 603 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மேலும் இந்த திட்டத்தின் விரிவாக்க பணிகளில் மேலும் 75 லட்சம் பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.