டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள் உள்ளிட்ட பல டெல்லி பாட்டியாலா கோட்டில் சமீபத்தில் ஆஜராகியுள்ளனர். சமீபத்தில் நடிகை சாகத் கன்னாவும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு சுகேஷ் சந்திரசேகர் உடனான சந்திப்பு பற்றி பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது கடந்த 2018 மே மாதம் டெல்லியில் உள்ள ஒரு பள்ளி விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்ததால் நான் மும்பை விமான நிலையத்திற்கு வந்தேன். அப்போது ஏஞ்சல் என்கிற பெண் எனக்கு அறிமுகமானார். இவர்தான் சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி ராணி என்பது எனக்கு பின்னர் தான் தெரியவந்தது. அவரும் என்னோடு டெல்லி வருவதாக கூறினார். இந்நிலையில் நாங்கள் டெல்லியில் இறங்கியவுடன் காரில் பள்ளிக்கு புறப்பட்டோம். ஆனால் வழியில் வேறொரு காரில் ஏஞ்சல் என்னை ஏற்றினார். அப்போது ஏஞ்சல் சுகேஷின் அறைக்கு என்னை அழைத்து சென்று விட்டார். அந்த அறையில் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் இருந்தது.

இந்நிலையில் சுகேஷ் தன்னை சேகர் ரெட்டி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் விலை உயர்ந்த வாசனை திரவியம் அடித்திருந்தார். மேலும் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் எனவும் டிவி சேனல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். “இதனையடுத்து நான் நடித்த டிவி சீரியல்களை அவர் விரும்பிப் பார்த்ததாகவும் என்னை பிடித்து போனதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின் திடீரென என் முழங்காலில் மண்டியிட்டு என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் நான் ஏற்கனவே திருமணம் ஆகி எனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறினேன்”.

அதற்கு அவர் உன் கணவன் சரியானவன் அல்ல. நான் உன் குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறேன் என தெரிவித்தார். உடனடியாக நான் சத்தம் போட்டு அலறினேன். இருப்பினும் சிறை என்ற காரணத்தினால் எனக்கு பயமாக இருந்தது எப்படியாவது அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனத்துடன் இருந்தேன். அதன் பின் எப்படியோ ஏஞ்சல் என்னை வெளியே அழைத்து வந்து விட்டார். இதனையடுத்து ஏஞ்சல் என்னிடம் இரண்டு லட்சம் பணம் அன்பளிப்பாக தந்தாள் அவளுடைய கைக்கடிகாரத்தையும் கழற்றி தந்தாள் நான் மும்பைக்கு சென்ற பின் எனக்கு தொலைபேசி மிரட்டல் வந்தது.

திகார் சிறை காட்சிகள் தங்களிடம் வீடியோவாக இருப்பதாகவும், அதை வெளியிட்டு விடுவதாகவும் கூறி என்னிடம் அவர்கள் மூன்று லட்சம் ரூபாய் பணம் பறித்தனர். அதேபோல் சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் எனக்கு இரண்டு மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும் என் குழந்தைகளை அக்கறையாக விசாரித்து எனக்கு ஏதாவது தேவையா? எனவும் கேட்டுள்ளார். இந்த சம்பவங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் 200 கோடி மோசடி பற்றி செய்திகள் வந்தது. அதன் பிறகு நான் சுகேஷ் யார்? ஏஞ்சல் யார்? என்பதை எல்லாம் தெரிந்து கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.