சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் முழு நேர உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான பணி கால அளவு 11 மாதங்கள் ஆகும்.

தமிழ் , ஆங்கிலம், பொருளாதாரம், கணினி மற்றும் உளவியல் என 48 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களை சென்னை பல்கலைக்கழகத்தில் இணையதள பக்கத்தில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.