தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் SET தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டு முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தமிழகத்தில் SET தேர்வை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.

இந்த தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியான நிலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு மற்றும் சமூக அறிவியல் உட்பட மொத்தம் 43 பாடங்களுக்கான SET தகுதி தேர்வு ஜூன் 3ஆம் தேதி கணினி வழியாக நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.