சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

பாஜக தலைவர்கள் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கர்நாடக நீதிமன்றம் உதயநிதியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. இதற்கு முன் பாடினா நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.