கோடைவிடுமுறைக்காக உதகையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது கோடைகாலம் முடிந்துவிட்டாலும் உதகையில் கோடைகாலம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை புரிகிறார்கள். இதனால் கூட்டம்  அதிகரித்தே காணப்படுகிறது. இதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி உதகை மலை ரயில் தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதகை சென்றடையும். இந்த சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.