இங்கிலாந்தில் உள்ள பிளாக்பார்ன் பகுதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பெண் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் சாப்பிட்ட உணவில் தலைமுடி இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தகராறில் ஈடுபட்டு தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுள்ளார். அதன் பிறகு உணவகத்தின் உரிமையாளர் டாம் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அதிர்ச்சி அடைந்தார்.
Fake drama for money refund pic.twitter.com/oqSnUHgJzU
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) November 14, 2023
அந்த காணொளியில் தகராறு ஈடுபட்ட பெண் தன்னுடன் வந்த நபருடன் கலந்தாலோசித்து தனது தலை முடியை அவரது உணவில் போட்டுள்ளார். அதன் பின்னர் தகராறு செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார். இந்த காணொளியை கடையின் உரிமையாளர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.