இத்தாலி ரோம் நகரில் செயல்பட்டு வரும் ரோனி ரோலர் என்ற சர்க்கஸில் இருந்து கிம்பா என்ற சிங்கம் தப்பித்து குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் காணொளியாக பதிவு செய்ததோடு இது குறித்த தகவலையும் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நான்கு மணி நேரத்தில் சிங்கத்தை சர்க்கஸ் குழு பிடித்து சென்றது. இதுகுறித்து சர்க்கஸ் குழுவை சேர்ந்த விலங்கு பயிற்சியாளர் கூறுகையில் கிம்பாவால் கூண்டின் தாழ்ப்பாளை திறக்கவும் உடைக்கவும் முடியாது என்றும் இது எப்படி நடந்தது என்பதே ஆச்சரியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.