பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டராக கலக்கி வரும் மேக்ஸ்வெல் இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிக் கொண்டிருக்கிறார். இவர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும்  விளையாடவில்லை. இதற்கிடையில் ஆர்சிபி நிறுவனம் அவருக்கு ஓய்வு கொடுத்திருந்தது.

இந்த நிலையில் தனக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு பிரேக் தேவை. என் உடலை சீராக்க இதுவே நல்ல தருணம். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி நல்ல மனநிலைக்கு என்னால் மீண்டும் திரும்ப முடியும்” என பேசினார்.