செல்போனில் தவறுதலாக சில போட்டோக்களை தெரியாமல் நாம் அழித்து விட வாய்ப்பு உண்டு. அவ்வாறு மொத்தமாக அழிந்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும்.

உங்களின் ஸ்மார்ட் போனில் பேக்கப் ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் புகைப்படங்கள் பெரும்பாலும் கிளவுட் ஸ்டோரேஜ் முறையில் சேமித்து வைத்திருக்கிற வாய்ப்புகள் உள்ளது. கூகுள் போட்டோஸ், ஐ கிளவுட், ட்ராப் பாக்ஸ் போன்ற கிளவுட் ஸ்டோரேஜ் செயலிகளை நீங்கள் போனில் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால் புகைப்படங்கள் உங்கள் மொபைலில் அலைந்து இருந்தாலும் அதனை மீட்டெடுக்கலாம்.

அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் அளிக்கப்படும் புகைப்படங்கள் அனைத்தும் பேக் அப் பைல் போன்ற ஒரு குறிப்பிட்ட போல்டரில் சேமிக்கப்படும். அதே சமயம் தவறுகளாக அழிந்த சில புகைப்படங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ரீசன்ட்லி டெலிட் போல்டரில் இருக்கும். அதன் மூலம் அழிந்த புகைப்படங்களை மீட்டு எடுக்கலாம்.

ஒருவேளை இந்த இரண்டு முறைகளிலும் உங்களால் புகைப்படத்தை மீட்டெடுக்க முடியவில்லை என்றால் மூன்றாம் தரப்பு செயலிகள் விண்டோஸ், மேக் மற்றும் மொபைல் டிவைஸ்களில் கிடைக்கின்றன. இதற்கு முதலில் உங்களின் மொபைல் அல்லது கணினியில் அந்த ரிக் கவர் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களின் டிவைஸை கணினியில் யூஎஸ்பி கேபிள் மூலம் இணைக்க வேண்டும். அதன் பிறகு போட்டோ ரெக்கவரி சாஃப்ட்வேரை ஆன் செய்து அதில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி அழிந்த புகைப்படங்களை ஸ்கேனை மேற்கொண்டு அந்த போட்டோ ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் வளைந்த புகைப்படங்களை மீட்டெடுக்கலாம்.

அதில் உங்களுக்கு தேவைப்படும் புகைப்படங்களை தேர்வு செய்து ரெக்கவர் என்ற பட்டனை அழுத்தினால் அந்த புகைப்படங்கள் மீண்டும் மொபைலில் உள்ளது கணினியில் சேமிக்கப்படும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றி பெரும்பாலும் தவறுதலாக நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்க முடியும்.