சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிப்பில் பிஸியாகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் வருடம் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது.

இப்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதில் தமிழரசன் படத்தை டைரக்டர் பாபு யோகிஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசன் படத்தை பார்த்த பின் நடிகர் கூல் சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “தானும் சினிமாவில் தான் இருக்கிறேன், தவறாக எடுக்க வேண்டும் ரம்யா. அனைத்து படங்களிலும் உங்களை மெத்தையில் போட்டு புரட்டி எடுக்கிறார்கள்” என அவதூறாக பேசினார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்கள் அவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுப்பினர்.