உக்ரைன் ரஷ்யா இடையே இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இரண்டு தரப்பினரும் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டுப் டோனட்ஸ் நகரில் பீரங்கி தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதலை உக்ரைன் மறுத்துள்ளது. இதனிடையே அப்பகுதியில் ஒரு நாள் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.