டி20 கிரிக்கெட்டில் புது வரலாற்றை தனதாக்கியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. நேற்றைய ஹைதராபாத் உடனான போட்டியில் விளையாடி விக்கெட் எடுத்ததன் மூலம், ஒரு விக்கெட் கீப்பராக டி20ல் அதிக விக்கெட் எடுத்த வீரராக தோனி மாறியுள்ளார். ஆட்டத்தில் தோனி ஸ்டம்பிங் செய்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியது பலராலும் சிலாகிக்கப்பட்டது.

இந்நிலையில் கேட்ச் குறித்து பேசிய தோனி, எய்டன் மார்க்ரமின் கேட்ச் தான் சிறந்த கேட்ச் என நினைத்தேன். ஆனால் எனக்கு கேட்ச் ஆஃப் தி மேட்ச் விருது தரவில்லை. க்ளவுஸ் அணிந்திருப்பதாலேயே கேட்ச் பிடிப்பதை எளிது என்று நினைக்கின்றனர் என கிண்டலடித்தார்.