காங்கிரஸ் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன்  ஈவெரா கடந்த ஜன.4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவருடைய மறைவால் இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி வெளியானது. பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்நிலையில்  இதில் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்தை தெரிவிப்பேன், கூட்டணி தர்மம் என ஒன்று இருக்கிறது. குறுகியகால செயல்பாட்டுக்காக அதை மாற்றிக்கொள்ளக்கூடாது. கடந்த முறை யார் போட்டியிட்டார்கள் என்பதையும் பார்க்கவேண்டும் என்றார்.