ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் தேமுதிக, அமமுக கட்சி வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி என்கிற மேனகா நவநீதன் போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கடந்த 2021 இல் நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.