ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரியும் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பழனிசாமி முறையீடு வழக்கில் அ.தி.மு.க பொதுக்குழு வக்கீல் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தயவுசெய்து பதில் அளிக்க காலதாமதம் செய்யாதீர்கள் என தேர்தல் ஆணையத்தின் நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க வழக்கில் பழனிசாமி தரப்பில் எதிர்மனுதாரர்கள் மூன்று நாட்களில் பதில் அளிக்கவும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை எதிர் மனுதாரராக சேர்க்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட ஏதுவாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். அந்த இடைக்கால மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.