ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து 49 சுயேட்சைகள், 25 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தேசிய மாநில கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் தென்னரசுவை மக்கள் திருப்பி அனுப்பினர். அதாவது, புதுவீதி வார்டில் இன்று தென்னரசு வாக்கு சேகரிக்க சென்றார். அதே நேரத்தில் அமைச்சர் ரகுபதி அங்கு வருவதாக இருந்ததால் அவரை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். அப்போது திடீரென தென்னரசு உள்ளே வந்ததால் அவரை திருப்பி அனுப்பினர்.