அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஓமானின் முக்கிய உத்திசார் மையமான சலாலா (Salalah) துறைமுகத்தின் மீது, கடந்த புதன்கிழமை அன்று ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளை ஈரான் குறிவைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சலாலா துறைமுகத்தில் இருந்த எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் மீது ட்ரோன்கள் மோதி வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
ஓமான் பாதுகாப்புப் படையினர் பல ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய போதிலும், சில ட்ரோன்கள் இலக்கைத் தாக்கியதில் துறைமுகத்தின் தெற்குப் பகுதியில் அடர்ந்த புகைமூட்டம் எழுந்தது.
#BREAKING: Visuals from Port of Salalah in Oman after a droone hit the fuel tanks.#Irán pic.twitter.com/16LLuOxw5G
— The North Front (@thenorth_front) March 11, 2026
“>
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சலாலா துறைமுகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச எரிபொருள் விநியோகம் மற்றும் கடல்சார் போக்குவரத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
