
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடும் போர் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இரண்டு நாடுகளிலும் இதுவரை 1100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதனைப் போலவே இஸ்ரேல் நடத்திய தாக்குதலிலும் 413 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தொடங்கிய போர் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் பாலஸ்தீனத்தில் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகின்றது.