பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்தார். அதில், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம் வழங்கப்படும். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஏழைகளுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படும், எதிர்காலத்தில் குழாய் மூலம் வீடு வீடாக எரிவாயு விநியோகம் செய்யப்படும்” போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.