2024 – 25 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ராகிங் தடுப்பு குறித்தான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ராகிங் தடுப்பு குழுக்கள் அமைப்பது, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது போன்ற ஏற்பாடுகளை கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டும். ராகிங் தடுப்பு தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் உதவி எண்களை கல்லூரி வளாகங்களில் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது