மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் வனிதா ராவத் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமத்தில் மதுக்கடைகளை திறந்து ஏழைகளுக்கு மானியத்தில் விஸ்கி, பீர் வழங்குவேன் என்றார். “ஏழை மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

எனவே மது அருந்துவதில் மட்டுமே ஆறுதல் பெறுகிறார்கள். அவர்களால் தரமான விஸ்கி, பீர் வாங்கி குடிக்க முடியாது. அவர்களுக்கு தரமான மதுபானம் இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.