சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக மக்கள் தற்போது விசித்திரமான காரியங்களைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு முதியவர் தனது தலையையே மீன் தொட்டியாக மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் தனது தலையைச் சுற்றி பிளாஸ்டிக் உறையை ஒட்டி, அதில் தண்ணீரை நிரப்பி மீன்களை வளர்க்கிறார். ஒரு பெண் அந்த மீன்களுக்கு முதியவரின் தலையிலேயே தீவனம் போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வினோதமான காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “பிரபலமாவதற்காக மக்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்களா?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“>

 

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் “அடுத்ததாக தலையில் நண்டு வளர்க்கப் போகிறாரா?” என்று கிண்டலாகக் கேட்டுள்ளனர்.

வெறும் 23 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, சமூக வலைதள மோகம் மக்களை எந்த அளவிற்கு விசித்திரமான செயல்களில் ஈடுபட வைக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.