ஜெர்மனியில் உள்ள பாம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு புதிய ஆய்வு, தொடர் கொலைகாரர்கள் (Serial Killers) தங்கள் குற்றங்களைச் செய்வதற்கு முன்பே அவர்களை அடையாளம் காண உதவும் 4 முக்கியமான மனோபாவ அம்சங்களைக் கண்டறிந்துள்ளது.

நார்சிஸ்ஸிசம் (Narcissism) என்றால் என்ன? தன்னைத்தானே அதிகமாகப் புகழ்ந்துகொள்வது, அதிக தன்னம்பிக்கை காட்டுவது, மற்றவர்களைத் தரம் தாழ்த்துவது போன்ற சுயநல குணாதிசயங்கள் கொண்டது.

ஆய்வாளர்கள் 45 தொடர் கொலைகாரர்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, அவர்களிடம் இந்த நான்கு வகையான நார்சிஸ்ஸிச குணங்கள் ஒன்றாகக் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளனர்:

  1. பேரார்வ போட்டி : மற்றவர்களைத் தாழ்வாக மதிப்பிடுவது, எப்படியாவது அவர்களைவிடத் தான் உயர்வானவர் என்று நிரூபிக்க நினைப்பது.

  2. பேரார்வ போற்றுதல் : தன்னைத் தொடர்ச்சியாகப் புகழ்ந்துகொள்வது, மற்றவர்களிடம் இருந்து அங்கீகாரம் (பாராட்டு) கிடைக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்புவது.

  3. பாதிப்புக்குள்ளாகும் பகைமை : தான் நிரந்தரமாக அநியாயம் செய்யப்பட்டதாக நம்புவது, எப்போதும் சந்தேக உணர்வுடன் இருப்பது, ஆக்ரோஷமாக நடந்துகொள்வது. (ஆய்வில் 84% பேரிடம் இதுவே பிரதானமாக இருந்தது)

  4. பாதிப்புக்குள்ளாகும் தனிமை : மனதளவில் உள்ள தனது பலவீனத்தைப் பாதுகாக்க, மற்றவர்களுடன் பழகாமல் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்வது.

ஆய்வாளர் எவாஞ்செலியா அயோஅன்னிடி கூறுகையில், இந்தக் கொலைகாரர்களின் மனதில், அதிகப்படுத்தப்பட்ட சுய முக்கியத்துவமும் , ஆழமான பலவீனமும் கலந்தே இருக்கின்றன. இந்த இரண்டு முரண்பட்ட குணங்களே சேர்ந்து, அவர்களைத் தீவிரமான வன்முறையைச் செய்யத் தூண்டுகின்றன.

முக்கிய எச்சரிக்கை: இந்தக் குணாதிசயங்கள் பலரிடம் சாதாரணமாகக் காணப்பட்டாலும், இந்த அம்சங்களைக் கொண்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்றும், இது வன்முறைக்கு நேரடியான காரணம் அல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.