சென்னையை சேர்ந்த தாமோதர கண்ணன் என்ற 24 வயது இளைஞர் சினிமாவில் துணை நடிகராக பணியாற்றி வரும் நிலையில் say hi என்ற ஆப்பை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலமாக அகிலா என்ற பெண்ணுடன் இவர் பழகி வந்த நிலையில் அந்தப் பெண் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் தன்னுடைய ஆபாச படத்தை அனுப்புவதாக கூறியுள்ளார்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சைபர் கிரைம் போலீஸ் பேசுவதாக கூறி அகிலா இறந்துவிட்டார் இதற்கு நீங்கள் ஆபாச படம் கேட்டது தான் காரணம் என்று கூறி 60,000 கேட்டு மிரட்டி உள்ளனர். 13000 ரூபாய் பணத்தை தாமோதர கண்ணன் அனுப்பியுள்ளார். அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிலையில் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.