பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் வாசு, நகர தலைவர் சீனிவாசன் உட்பட 10 பேர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பாதயாத்திரையின் போக்குவரத்துக்கு இடையூறாக கூட்டம் நடத்தியதாக அண்ணாமலை மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தனது யாத்திரையின் போது தடையை மீறி ஊர்வலம் சென்றதாக அண்ணாமலை மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.