கேரளாவின் பாலக்காடு பட்டாம்பி அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்தி அவருடைய நண்பர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பிரவியா என்ற இளம் பெண்ணை ஆளுரை சேர்ந்த நண்பர் சந்தோஷ் குமார் இன்று காலை கொடூரமாக கொலை செய்தார். தனியார் மருத்துவமனை ஊழியரான பிரவியா, வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது வழிமறித்து இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து பிரவியாவை கத்தியால் குத்தினார்.

அதன் பிறகு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே அங்கிருந்து தப்பிய சந்தோஷ் அவரது சகோதரரின் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரவியாவின் திருமண நிச்சயதார்த்தம் இம்மாதம் 21ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் காதலில் இருந்து பின்வாங்கி பழிவாங்குவதை நிறுத்தியதே கொலைக்கு காரணம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.