சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள்  ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.  போட்டி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து மூன்று மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லலாம். குளிர்சாதனப் பேருந்துகளில் இந்த சலுகை கிடையாது என்று அறிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.